மழை வருது..மழை வருது...குடை கொண்டு வா!!

அன்று மாமா,மாமி ஊரிலிருந்து வருவதாக இருந்தது. ஆனால் இரவு 8.30 ஆகியும் வரவில்லை. நாங்கள் நாடகம் பார்க்க தொ.கா.வின் முன்னால் இருந்து விட்டோம்.வழமையாக தொடர்ந்து பார்க்கின்ற நாடகம்...அம்மா அதிலேயே ஒன்றிப் போயிருந்தா. ஒரு கதா பாத்திரம் எங்கோ சென்று திரும்பும்பொழுது பலத்த மழை பெய்கிறது. ஒரு கொட்டிலில் அவசரத்திற்கு ஒதுங்குகிறார்.
அப்போது பார்த்து gate இல் தட்டிச் சத்தம் கேட்டது. அப்போது நாங்கள் இருந்த வீட்டில் வாசல்கதவோடு தான் TV யை வைத்திருந்தோம்.TVக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசை. அதில் தான் அம்மாவின் Handbag குடை எல்லாம் வைப்பது வழக்கம். gate இல் தட்டிச் சத்தம் கேட்டது தான் தாமதம் அம்மா TV யிலிருந்து பார்வையை விலக்காமலே வாசலுக்குப் போனார்.திடீரென்று எதோ ஞாபகம் வந்தவர் போல ஓடி வந்து TV பக்கத்திலிருந்த மேசையில் வைத்திருந்த தன் குடையை எடுத்து விரித்துக் கொண்டு gate ஐ திறக்கப் போனார். உள்ளே வந்த மாமா மாமிக்கோ ஏன் அம்மா மழை பெய்யாத போது "நனைந்து விடுவீர்கள்" எனக் குடை விரித்துப் பிடிக்கிறார் என விளங்கவில்லை...அம்மாவிடம் கேட்டார்கள், அப்போது தான் அம்மாவுக்கு உறைத்தது..தான் TVயில் மழை பார்த்து விட்டு உண்மையாகவே பெய்கிறது என நினத்துக் குடை பிடித்திருக்கிறா என்று. பிறகு அங்கே பெய்தது சிரிப்பு மழைதான்!

0 படகுகள் :

பெட்டகம்