டும் டும் டும்

அப்பாடா.. ஒருமாதிரி திரும்பவும் வலைபதிய வந்துட்டன். வேலை பரவாயில்ல. போய் வாறதுக்குத்தான் eachway கிட்டத்தட்ட 80 நிமிசம் எடுக்குது. வீட்ட வந்து சமைச்சு சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் சரியா கிடக்கு. 2 கிழமை பயிற்சியெல்லாம் இந்த XPSP2 வெளியீட்டுக்குத் தான். ஒவ்வொருநாளும் 6- 7 handouts. வாசிச்சிட்டு போகோணும். இதுக்கு நடுவில சிட்னியில எனக்குக் கிடைச்ச முதல் நண்பிக்கு கலியாணம். வைச்சாளே கலியாணத்தை..காலம 8 மணிக்கு. விடியப்புறம் 5.15க்கு கிணிகிணியெண்டு சத்தம் போட்ட கடிகாரத்திட(உண்மையாவே "கடி"காரம் தான்) தலையில ஒண்டு போட்டுட்டு திரும்பிப் படுத்தன். 7.30 மணடபத்தில நிக்கச் சொன்னது ஞாபகம் வந்து துலைக்க...2.30 மணிக்கு படுத்து 5.30க்கு எழும்பின 3 மணித்தியால நித்திரை காணாது என்டு சொன்ன உடம்பும் மனமும் வலுக்கட்டாயமா ("V" குடிச்ச மாதிரி ;o) )உசார்ப்படுத்தப்பட்டன.பிறகென்ன...வழமையா நடக்கிற சீலைப்போராட்டம். நேரங்காலம் தெரியாம தலைப்பு பிளீட் வரமாட்டனெண்டு...ஆ!"இந்த சீலையை கண்டு பிடிச்சவன் மட்டும் என்ட கையில கிடைச்சா..."என்று வழமையான வீர வசனம். சரி "அன்புள்ள அத்தானை" எழுப்பி குளிக்க அனுப்பி நேரத்தைப் பாத்தா..ஐயய்யோ 6.30.!! தேத்தண்ணிக்கு தண்ணி வைச்சு, இரவு 2க்கு (பின்னேரம் மண்டபம் சோடிக்கப் போய் வேலைகள் செய்து நல்லா கூத்தடிச்சு,அங்கருந்து பொம்பிளையப் போய் பாத்திற்று வீட்ட வர 10.30- 11மணி, சீலைய அயர்ன் பண்ணி வச்சு{அம்மாவின் அருமை இப்பத்தானே தெரியுது!} வடிவா வெட்டி ஒட்டி கீறி வச்சிருந்ததையெல்லாம் சேர்த்தெடுத்து)செய்து முடிச்ச வாழ்த்து மடலை (scan பண்ண யோசிச்சனான்...பிறகு நித்திரக்களையில மறந்திட்டன்.)அதுக்கெண்டு தனிய விசேசமா செய்த பைக்குள்ள வைச்சு செலொடேப்பால ஒரு ஒட்டு. (அட...என்ன இது இன்னும் இந்த பிளீட் சரி வருதில்லயே..grr!)தென்னாபிரிக்காக்கு குடும்பம் நடத்தப் போறவக்கு வித்தியாசமா என்ட கையாலயே ஒரு மடல் செய்து குடுத்திருக்கிறம்.

மண்டபத்துக்கு வந்து அதில நிண்ட ஒரு அன்ரிய பிடிச்சி ஒருமாதிரி பிளீற்ற வழிக்கு கொண்டு வந்தன். பிறகு வழமையான சின்னச் சின்ன வேலைகள் செய்திட்டு கலியாணம் பாக்க வசதியா நண்பிகள் கூட்டம் முன்னுக்கு போய் இருந்து கொண்டம். இதுக்குள்ள என்னையும் சேர்த்து 4 பேர் தலை மயிர நேராக்கியிருந்தை கண்டு ஆச்சிரியப்பட்டிட்டன்.( தலைமயிரில ஒரு பரிசோதனை முயற்சியும் செய்யப் போறல்ல நான். 3 மாசத்துக்கு ஒருதரம் அடில வெட்டுறதோட சரி. தலை மயிர் நேராக்க வேணுமென்டு கன நாள் ஆசயா கிடந்த.ஒரு மாதிரி நிறைவேத்திட்டன்!) வழமையா எல்லாத்தயும் கதைச்சு கொள்ளுறனாங்க...இந்த முறை ஒத்தரும் தலைமயிர் அலங்காரத்த பத்தி மூச்சும் விடல்ல. சும்மா சொல்லப்படா... எல்லாற்ற ஒசிலும் நல்லாத்தான் இருந்தது. கல்யாணம் நல்லபடியா நடந்துது.

ஒரு சின்ன விசயம்..கூறைத் தட்ட வாங்க முன்னம் மாப்பிள்ளைட காலில கலியாணப்பொம்பிள விழுந்து கும்பிட்டவ. இத நான் ஒரிடத்திலயும் இதுக்கு முதல் காணல்ல. முருகன் கோயில் ரவி ஐயா தான் கலியாணம் நடத்தினவர். ஒரு வேளை இந்திய முறையா இருக்கலாம் என்டு நினைக்கிறன். ஏன் விழுந்து கும்பிடுற? என்னப் பொறுத்த வரையில கொஞ்சம் பிற்போக்காப் பட்டுது. இன்னொண்டு என்னண்டா அருந்ததி காட்டினவங்க. இளஞர் தின விழா இதழ்ல ஒராள், தான் எழுதியிருந்த கட்டுரையில மண்டபத்துக்குள்ள(பகல்ல) நடக்கிற கலியாணத்தில கூரைக்குள்ளால பாக்க முடியாத நட்சத்திரத்தை காட்டுறதப் பற்றி சொல்லிருந்தவர். பொம்பிள இந்த கட்டுரைய வாசிச்சிருக்கிறா போல..சிரித்து விட்டு மாப்பிள்ளையிடம் என்னவோ சொல்ல அவரும் சிரித்தார்.ஐயாவும் சிரித்தார். எங்களுக்கும் கட்டுரை ஞாபகம் வர நாங்களும் சிரிச்சு வச்சம். நல்ல சாப்பாடு. சந்தோசமாக, நல்ல படியா முடிஞ்ச கலியாணம். பொம்பிள-மாப்பிள மனம் நிறைஞ்சு வாழோணும் என்டு வாழ்த்திறன்.

பெட்டகம்