உன்னை 1 கேட்பேன்..

இதெல்லாம் தேசத்துக்கு மிகவும் முக்கியமான கேள்விகளா என்றெல்லாம் ஆராயாமல்..பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. முகில்களின் நிறை அளக்கப்படுவதுண்டா? எப்படி அளக்கிறார்கள்?

2. கவலையாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நண்பர் வந்து தேற்றுகிறார்.."இதுக்கெல்லாம் போய் கவலைப்படாதே...எத்தனை பேர் உன்னை விட கஷ்டமான நிலமையில் இருக்கிறாங்க என்று யோசி". பேச்சுக்கு உங்களை விட கஷ்டத்தில் "க" என்பவர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கும் ஒரு நண்பர் வந்து (உங்களூக்கு உங்கள் நண்பர் சொன்னது போலவே) தேறுதல் சொல்லலாம் தானே...அப்போ உங்களுக்கு "க" போல "க" வுக்கு "ப" என்று ஒரு ஆள் வரக்கூடும். "ப" வுக்கு ஒரு "ச" இருப்பார்.(என்னை "நீ போய் 'சா' " என்று சொல்லக்கூடாது ஆமா!!)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி?தேற்றுவதற்கு நண்பர் இல்லாதவரா?

3. "அ" ஒரு விதவை. "அ" வை திரு."எ" திருமணம் செய்தால், "எ" விதவைக்கு வாழ்வளித்தவர் எனப்படுவார். ஆனால் அதே "எ" ஒரு தபுதாரனாயிருந்து "அ" அவரைத் திருமணம் செய்து கொண்டால் "அ" 2ம்(2/3/4 எது வேணா போட்டுக்கொள்ளலாம்) தாரம். அது எப்படி? ஏன் "அ" "எ"க்கு வாழ்வளித்தவராகக் கூறப்படுவதில்லை?

இனிமேலும் கேட்கப்படும்...(ஏன் ஓடுறீங்க??) ;o)

பெட்டகம்