நானும் படங்காட்டுறன்


கொஞ்ச நாளாய் [26ம் மாடிக்கு வேலையில் குடி பெயர்ந்ததிலிருந்து என்று வாசிக்கவும் :O) ]கட்டடங்கள்/சாளரங்களைப் படமெடுக்கும் வியாதி வந்திருக்கிறது.

எடுத்தவற்றில் இரண்டு:

கண்ணாடியில் கோபுரம்

பட்டுத்தெறித்ததில் நெளிந்த யன்னல்

18 படகுகள் :

கார்திக்வேலு May 29, 2006 12:45 am  

Not bad at all !!
Both photos had very good composition

துளசி கோபால் May 29, 2006 9:21 am  

படங்கள் நல்லா இருக்கு.
ஆமா, திங்கக்கிழமைவேலைக்கு வந்தவுடனே பதிவு?

ஓஓ.. இது போட்டபிறகு நேரம் இருந்தா அப்புறம் ஆஃபீஸ் வேலையோ?:-))))))))))))))))))))

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 9:28 am  

நன்றி கார்திக் வேலு. எடுத்த படங்களைக் கணினியில் சேமித்தவுடன் இன்னும் சிலவற்றைப் பதிய உத்தேசம். எடுப்பது அநேகமாக செல். பேசியிலேயே.. அதனால் தெளிவில்லாமலிருக்க வாய்ப்புண்டு.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 9:28 am  

துளசீஈஈ...

இல்லைங்க. அதிசயமா நேத்து வீட்லேருந்து பதிஞ்சேன். ஆனா வகைப் படுத்த முடியவில்லை. அதான் அலுவலகம் வந்ததும், எட்டிப் பார்த்து வகைப்படுத்திட்டேன்... ;O)

துளசி கோபால் May 29, 2006 9:31 am  

வீட்டுலே கணினி சரியாப்போச்சா?

அப்ப இன்னும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கலாமா?

-/பெயரிலி. May 29, 2006 9:31 am  

பட்டுத்தெறித்தது நல்லாக இருக்கிறது.

26 ஆம் மாடியிலே படமெடுக்கோணுமெண்ட வியாதி வந்தால், பரவாயில்லை. பாயோணுமெண்ட வியாதி வந்தாத்தான் யோசிக்கோணும் ;-)

ஒரு பொடிச்சி May 29, 2006 9:36 am  

வாழ்க்கையே பல படங்களின் கோர்வைதானே ஷ்ரேயா... !!!
(சும்மா தத்துவார்த்தமா ஏதும் சொல்ல எண்டு....)
:-)
படங்கள் ஒரு ரைப்பா இருக்கு.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 9:54 am  

துளசி - அதெல்லாம் சரியாப் போச்சு. ஆனா கைவைக்கத்தான் நேரங்கிடைக்குதில்ல. அலுவலகமிருக்கப் பயமேன்? ;O)

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 9:54 am  

நன்றி பெயரிலி. பாயோணுமெண்டு நினைச்சாலும் பாயேலாது. திறக்க முடியாத கண்ணாடி யன்னல்கள்.. :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 9:55 am  

பொடிச்சி - நானே ஒரு மார்க்கமாமெண்டு கனபேர் சொல்லியிருக்கினம்.. ;O) படங்கள் அப்பிடியிருக்கிறதில ஒன்டுமில்லத்தானே..
பி.கு: தத்துவம் நல்லாருக்கு. logoவா எடுத்துக் கொள்ளட்டுமா?? :O)

முகில் May 29, 2006 9:57 am  

படங்கள் நன்றாயிருக்கின்றன.

இளங்கோ-டிசே May 29, 2006 12:26 pm  

ஷ்ரேயா, படங்கள் வித்தியாசமாயிருக்கின்றன. இன்னும் கொஞ்சம் பெரிதாய்ப் போட்டு படங்காட்டினால் நன்றாகவிருக்கும் போலத்தோன்றியது. படங்களைப் பார்க்கும்போது சிக்கலான arithmetric பின்னணியில் இருக்கின்றது போலத்தோன்றுகிறது :-).

கார்திக்வேலு May 29, 2006 1:48 pm  

Not sure if everyone is facing this problem, your blogs seems to not use Unicode UTF-8 encoding.

Evertime ..I need to change the encoding in the browser .
I dont see this problem with many other tamil blogs.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 3:16 pm  

டிசே: எனக்குக் கணக்குக் கொப்பிதான் ஞாபகம் வாறது :O)

கார்திக்வேலு: ரெம்ப்ளேட்டைப் பார்க்கிறேன். சொன்னதற்கு நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 29, 2006 3:29 pm  

கார்திக்வேலு: //Not sure if everyone is facing this problem, your blogs seems to not use Unicode UTF-8 encoding.//

இப்ப சரியாத் தெரிகிறதா என்றொரு முறை பார்த்துவிட்டு mazhaipenn.shreya at gmail.comஇற்கு மயில் தூது விடுறீங்களா?

Syam May 31, 2006 6:14 am  

படங்கள் அருமை, அது சரி வைகாசி மாதத்தில் 28 நாட்கள் ஆகிவிட்டனவா?

வசந்தன்(Vasanthan) May 31, 2006 11:42 am  

ஓமோம். கார்த்திக் வேலுவின் பிரச்சினை இவ்வளவு காலமும் எனக்கும் இருந்து வந்தது தான்.
இண்டைக்கு எல்லாம் சரியா இருக்கு.

`மழை` ஷ்ரேயா(Shreya) May 31, 2006 5:30 pm  

சரியாகிட்டுதெண்டாச் சரி. :O)

பெட்டகம்