எனக்கு மட்டுமா இப்படி?

பாலர் பாடசாலையில் படிக்கும் போது நானும் தோழியும் சரியான குழப்படி.எப்போதும் ஒன்றாகத் தான் திரிவோம். ஒரு நாள் கையைக் கோர்த்துக் கொண்டு ஓடும் போது சாணியில் கால் வைத்து, சறுக்கி விழுந்து உடுப்பெல்லாம் அழுக்காகி விட்டது.
மேல் கூறினதை நான் எத்தனையோ முறை பலருக்குச் சொல்லியிருக்கிறேன்.எப்போது சொன்னாலும் உருவாக்கிச் சொல்லுகிற(ஏன் அப்பிடி இட்டுக்கட்டி/கற்பனை செய்து சொல்லுகிறேன் என்று தெரியாமலே!!) மாதிரி ஒரு உணர்வு. இந்தத் தோழி கொழும்பு வந்த போது எங்கள் வீட்டிற் தான் தங்கியிருந்தா. ஒருநாள்  என் "கதை"யை யாருக்கோ நான் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். தோழி ஆச்சரியம் மேலிட "உமக்கு அது இன்னும் ஞாபகமிருக்காடா" என்று கேட்டாள். அப்போது தான் உண்மையாகவே நடந்ததைத் தான் நான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்..கற்பனையில் உருவாகினது அல்ல என்று எனக்கு மண்டையில் உறைத்தது. ஆனாலும் எனக்கு சம்பவம் நடந்த ஞாபகம் இல்லை.ஆழ் மனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள கணக்கற்ற ஞாபகங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறதா? கதையாக வெளிவரத் தூண்டிய காரணி என்ன? யாராவது உளவியல் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்த முடியுமா? யாருக்காவது இதைப்போன்ற அனுபவம் உண்டா?(அல்லது வழமையாய் என் நண்பர் குழாம்  சொல்வது போல "அது உனக்கு மட்டும் தான் இப்பிடியெல்லாம் நடக்கும்" ஆ? )  :O/


பெட்டகம்