விக்கிரமாதித்தன்

முதலில் விக்கிரமாதித்தன் கதைகள் அறிமுகமானது அம்புலி மாமாவின் மூலம்.(2ம் தரம் அறிமுகமாகாது...ஏற்கெனவே தெரியும் என்பதால்..ஹி..ஹி)அப்போதெல்லாம் "அடே எவ்வளவு வீரன், புத்திசாலியாக இந்த வேதாளத்திற்கு பதில் சொல்கிறானே" என்ற வியப்பும் அதோடு கூடவே "இந்த வேதாளம் எப்போதடா இவன் கையிலிருந்து பறக்காதுவிடும்"என்ற நினைப்பும் கதை வாசிக்கும் போது கூடவே வரும். சமீபத்தில் விக்கிரமாதித்தன் கதை என்கிற முழுக்கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. இதை வாசித்த பிறகு மேல்வீட்டிலிருந்தவன்(!) தெருவுக்கு வந்து விட்டான்.

வேறென்ன பின்னே!!...எங்கே போனாலும் அவனுக்கு கிடைக்கும் வெற்றியில் மகிழ்ந்து குறிப்பிட்ட கதையில் வரும் மாந்தர் தத்தம் மக(ள்க)ளையோ சகோதரி(களை)யோ இவனுக்கு கொடுப்பார்களாம்..இவனும் அவர்களுடன் "உல்லாசமாக" காலம் கழிப்பானாம்(சரியான "அலைச்சல்" ஆளாக இருந்திருப்பான் போலிருக்கிறது!!). இவனது முந்தைய மனைவிகளும் இவன் கூட்டிக் கொண்டு வருகிறவர்களை (அதாவது புதுமனைவிகளை)அன்புடன் வரவேற்பார்களாம். எந்தப் பெண்ணுக்கு இதற்கு மனம் வரும்?இந்த அழகில், பெண்ணுக்கு வகுத்திருக்கும் நியதி என்று வேறு 1008 வெறுப்பேற்றும் விஷயங்கள்!! (இவதான் இதுகளைப் பற்றி வடிவா நறுக்கென்று எழுத சரியான ஆள்!!)

காளி பக்தனாம்..இப்படிப் பட்டவனுக்கு நினைத்த மாத்திரத்திலேயே அவவும் காட்சி கொடுப்பாவாம்!!அட அட அட!!! இன்னும் எழுதலாம் புத்தகத்திலிருந்த மேதா விலாசங்களை..சும்மா ஏன் நற நறத்து இரத்த அழுத்தத்தை கூட்டிக்கொள்ள?

வாழ்வியல் அல்லது உங்கள் நடத்தை!

நீங்கள் செய்யும் செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஏதாவது ஒன்று..ம்ம்?

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...நான் செய்ய போகும் / செய்து கொண்டிருக்கும்/செய்து விட்ட இந்தச் செயலை ஒரு ஒளிவு மறைவுமின்றி என் பெற்றோரிடம் என்னால் சொல்ல முடியுமா?இதையே "ஒரு சிறு மாற்றமும் இன்றி பின்பற்று" என என் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்னால்??

இரண்டு கேள்விக்குமே உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நடத்தையில் பிரச்சனை இல்லை. இதுதான் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய Code of conduct. ஒரு நாளும் பிழை செய்ய மாட்டீர்கள்.

இதுதான் இந்துமதம் சொல்லும்..தர்மா!

இன்று TRAC இல் uncleஜெகா சொன்னது!

சிறுவர்களும் சிறுவர் பாடல்களும்


தோழி வீட்டில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் TRAC இற்கு கோலம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒரு 3 வயதுப் பிள்ளையும் இருந்தா. ஒரு பாட்டுப் பாடிக் காட்டுங்கோ என்று தோழியின் தந்தை கேட்க ஆங்கில சிறுவர் பாடலான Twinkle Twinkle Little Star என்பதை பாடிக் காட்டியது பிள்ளை. அதற்கு அவர் "அப்பிடி இல்லை..இப்பிடி பாட வேணும்" என சொல்லி கர்நாடக இசை பாணியில் ஆலாபனையெல்லாம் செய்து பாடிக் காட்டினார். குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. "கிளுகிளு" என்று என்ன ஆனந்தமான சிரிப்பு! என்னதான் இருந்தாலும் சின்னப் பிள்ளைகளின் சிரிப்பின் வசீகரமே தனி!!

இதற்குப் பின் பேச்சு இலங்கையில் கற்றுத் தரப்படும் ஆங்கில சிறுவர் பாட்டுகளைப் பற்றித் திரும்பியது. தனது ஆசிரிய நண்பர் சொன்னதாக தோழியின் தந்தை சொன்னார்..மேற் சொன்ன அதே Twinkle Twinkle Little Star பாட்டை கற்பித்துவிட்டு அதன் அர்த்தமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் முதல் நாள். அடுத்த நாள் வகுப்பில் பாடிய போது ஒரு பிள்ளை பாடிற்றாம் " Twinkle Twinkle Little Star.....like a diamond in the 'கை' " என்று. இன்னும் சிரிப்பு என்னவென்றால் அது நகைக்கடை உரிமையாளரின் பிள்ளையாம்! சொன்னது சரிதானே!!

தோழியின் தந்தையே தொடர்ந்தார்..ஒருநாள் வேலை நிமித்தம் வெளியிற் சென்ற போது ஒரு சிறுவன் பாலர் பாடசாலை முடிந்து வீட்டிற்குச் செல்கையில் படித்த பாட்டை பாடிக் கொண்டு போயிருக்கிறான். என்ன பாடுகிறான் என்று அறியும் ஆவலில் அவனுக்கு சற்று நெருக்கமாக பின்னாலேயே நடந்து சென்றாராம். அவன் பாடுகிறான் "கூப்பிட்ட பின் little toffee தின்..." இவருக்கோ பாட்டின் ராகம் ஞாபகம் வந்தாலும் இவன் என்ன பாடுகிறான் எனப் புரியவில்லை. பிறகு தான் விளங்கியதாம் "Ding dong bell..pussy's in the well, who put her in, little Tommy thin..." என்று.

பிறமொழி சொற்களை தெளிவாகவும் அர்த்தத்துடனும் கற்பிக்காவிட்டால் இப்படித்தான் போலிருக்கிறது!

பெட்டகம்