ஒன்றும் பலதும்

ஒருசொல் பல பொருள் தெரியும்…(உதாரணமாக 'அணை' = தடுப்பு(அணைக்கட்டு), அணைத்தல் (மேல்kind இதை செய்ய முடியாம தான் புலம்புறாங்க ;o) ) , நூர்த்தல்(விளக்கை அணைத்தல்) இப்படி..

ஒரு வசனத்திற்கு 3 பொருள் கண்டு பிடித்தார் எங்கள் கணித ஆசிரியர். (சொல்லாததுக்கே அர்த்தம் கண்டுபிடிக்கிற இந்த நாளில் இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறீர்களா..அதுவும் சரிதான். சரி சரி கதைக்குப் போவம் வாங்க). வீட்டுப்பாடம் செய்து வரச் சொல்லியிருந்தார். அன்றைக்கு வகுப்பில் மாணவர் வரவும் சற்று குறைந்திருந்தது. ஓரு மாணவனை எழுப்பி “வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று சொல்லி, அந்த 2 விளக்கங்களையும் சொன்னார்

1. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (அதாவது..செய்யவேயில்லை)
2. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (செய்த பாடத்தை கொண்டு வர மறந்தாச்சு)

வகுப்பு சிரிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் தொடர்ந்து..”நீ வகுப்புக்கு வந்திருக்கிறாய் அதனால இந்த கடைசி விளக்கம் உனக்குப் பொருந்தாது! என்று சொல்லி இதையும் சொன்னார்
வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை!!

கணக்கு ஆசிரியர் எத்தனை கொம்பினேஷன் ஏலும் என்று பார்த்திருக்கிறார் போல!


பி.கு: அவர் 4 பொருள் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்….ஆனாலும் 3 தான் இப்ப நினைவிற்கு வந்தது. 4 வதை கண்டுபிடிச்சா சொல்லுங்க..திருத்தி விடுகிறேன்.

பெட்டகம்