அரக்கர்கள்

இங்கே அவுஸ்திரேலியாவில் ஏறத்தாழ 400 அரக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலத்தில் ஏதடா அரக்கர்கள் என்று பார்க்கிறீர்களா? இந்தப் பாதகர்களை வேறெந்தப் பெயர் கொண்டு விளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து, அந்தக் கொடுமையை படம் பிடித்து இணையத்தில் தளம் அமைத்து காட்டுகிறார்களாம். இந்த மாதிரியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களை கைவசம் வைத்திருந்தனர் என்கிற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர்கள், வைத்தியர், சட்டத்தணிகள், கணினி இயக்குநர், காவற்துறையினர், மற்றும் பிள்ளை பராமரிப்பாளர்களும் அடங்குவராம்! (இவர்களில் ஐந்தாறு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்). பாடசாலை கழிப்பிடங்கள்/குளியலறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கொடுமையிலும் கொடுமை 0 - 3 வயதான பாலகரும் குழந்தைக் காப்பகங்களில் அவர்களது nappy, உடைகள் மாற்றும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களது காமவெறிக்கு அளவில்லையா? தத்தம் குடும்பத்தில் குழந்தைகளுடன் இவர்கள் வாழவில்லையா? தம் குழந்தைகளை வேறொருவர் இப்படிச் செய்தால் பொறுப்பார்களா? எங்கே போகிறது சமுதாயம்?

பெட்டகம்