அதிகாலை என்ன வேளை?

தமிழ் மருத்துவ நிதியத்தினர் நடாத்திய முத்தமிழ் மாலை 04 இல் இடம்பெற்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "ஆரொடு நோகேன்" என்ற பெயரில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கு யாரை நோவது என்பதே கருப்பொருள். நகைச்சுவையாக நல்லாக இருந்தது. அதிலே கூடவே நடித்த ஒருவரின் கடி சொல்லி மாளாது. நடிக நடிகையர்(சரி சரி...நீங்க "நினைப்புத்தான்" என்று சொல்வது கேட்கிறது!!) நிகழ்ச்சிக்குப் அடுத்த கிழமை உணவகமொன்றில் ஒன்று கூடினோம். அங்கே வைத்து ஒருவர் கடித்த கடி இருக்கிறதே...

ஒருவர்: அண்ணா, ரிமோட் கொண்டுவந்தனிங்களா?கடியர்: அவவை வீட்ட விட்டிட்டு வந்திட்டனே!!

நாடகத்தின் ஒளிப்பிரதியைப் பார்க்கையில், அதிலே நாடக இயக்குனர் சொன்னார் "இந்த நாடகத்தை உங்கள் முன் அரங்கேற்றுவது என் பாக்கியம்"அதற்கு 'கடி'யர் "அது யாரது பாக்கியம்?".."எங்களுக்குத் தெரியாம எப்பிடி நாடகத்தை மேடையேத்தினவ?"

பாட்டுக் கச்சேரி வைத்தோம்...கடி மன்னன் பாடுகிறார்..."றாவும் கள்ளும் கைகளில் ஏந்தி..."(பாலும் பழமும் கைகளில் ஏந்தி..)"உளுந்து வடையை சட்னியில் தொட்டு சாப்பிட்டு பாரு ஊ .., என் பேரு வடையப்பா,சூடான வடையப்பா...சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று.

கடைசியாய் பாடினார் இன்னுமொரு மாற்றிய பாட்டு... இதற்கு சிரிப்பு வரவில்லை..எல்லார் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது வலி.

'80களில் வந்த பாடலாம்.."அதிகாலை..சுப வேளை..உன் ஓலை வந்தது..."
மாற்றிய பிறகு: "அதிகாலை..கெட்ட வேளை..பொம்பர்(bomber) வந்தது.."

பெட்டகம்