ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?

கடந்த ஞாயிறன்று(தந்தையர் தினம்) சிட்னி தந்தையருக்கு வானத்திலிருந்து கிடைத்த பரிசு புகைப்படங்களாக. ..(படங்கள் தரவிறக்கப் பட அதிக நேரம் எடுக்கிறது. இன்னொரு வலைமேயும் சாளரத்தைத் திறந்து, வேறு பக்கத்திற்கு ஒரு விசிட்டடித்து வரவும், தரவிறக்கவும் முடியவும் சரியாக இருக்கும். அசௌகரியத்திற்கு மன்னிக்க!)

தடதடவென வந்து விழுந்த சிறு பனிக்கட்டிகள், வெப்பநிலை திடீரென்று தாழ்ந்தமையால் மறுநாள் காலை வரை நிலத்தோடு ரகசியம் பேசின.
கனேடிய, ஐரோப்பிய நகரங்களில் காணக்கிடைக்காததா என்று நீங்கள் நினைக்கக் கூடும். சிட்னிக்கு இது ஒரு "freak storm". இப்படியான நிகழ்வு மிக அபூர்வம். :o)

கேள்விகளுக்குரிய பதில்கள்

சில நாட்களாய் சில கேள்விகள் குடைகின்றன. (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தியை வாசித்ததன் விளைவு!!) தன்னை அறிதல் என்கிற வகைக்குள் அடங்கும் என்றே நினைக்கிறேன். மிகப் பழைய கேள்விகள் தான்...என்றாலும் புதிதாய் ஒவ்வொருவருக்குள்ளும்.....

1. நீங்கள் யார்?
இந்த உடலா?இத்தனை கேள்விகள் கேட்கும் மனமா?அதற்கும் மீறிய ஒன்றா?

2. நீங்கள், நீங்களே தான் என்பதை எப்படி அறிகிறீர்கள்? (How do you know "you are you'?)
இரவு படுக்கப் போகிறீர்கள். காலையில் எழுந்ததும், "இரவு படுக்கைக்குப் போன அதே ஆள்தான் நான்" என்பதை எப்படி, எதன் மூலம் உணர்கிறீர்கள்?ஞாபகங்கள் மூலமா?இரவு நித்திரையிலே மறதி வந்து விட்டதென்று வையுங்கள்..அப்போது உங்கள் நிலை என்ன? மறதி வந்தவர் தன்னை எப்படி உணர்கிறார்?

3.மகிழ்ச்சி என்பது எந்த நிலையில் ஏற்படும் உணர்வு?போதும் என்கிற மனப்பான்மையில் எழுவதா?பரீட்சையில் சித்தியெய்திய திளைப்பா? சலனமற்ற ஒரு பொழுதில் உணரப்படுவதா? திருப்தி, elation,அமைதி என வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடப்படும் ஒன்றுதானா மகிழ்ச்சி என்பது? சரி - அப்படியே வைத்துக் கொள்வோம்; இத்தனை வார்த்தகளிருக்க மேலும் ஒரு சொல் ஏன், அதே நிலையை குறிக்க? திருப்தி, திளைப்பு, அமைதி என்பன வெவ்வேறான நிலைகள்/ உணர்ச்சிகள். அவை எப்படி மகிழ்ச்சியாக முடியும்? மேலும் மகிழ்ச்சி என்பது புறக்காரணிகளில் தங்கியிருக்கும் ஒன்றாக(எனக்குத்) தெரியவில்லை. அனேகமான பொழுதுகளில் "சந்தோசமாயிருக்கிறாயா ஷ்ரேயா" என்று என்னையே நான் வினவிக் கொள்ளும் போது, எனக்குள்ளிருந்து ஆமென்ற பதிலே வருகிறது. அந்தக் கணத்தில் நான் எப்படி உணர்கிறேன்?ஆமென்ற பதில் என் மனநிலையை சார்ந்து வருகிறதா அல்லது மகிழ்ச்சியே என் இயல்பு நிலையா?

இவற்றுக்கு பதில் கிடைக்க உள்நோக்கிய பயணம் ஒன்றே வழி என்பது தெரிகின்றது. ஆனாலும் பதில்கள் எனக்குள்ளேயிருக்குமா அல்லது பிரபஞ்சத்தின் ஒரு தகவல்தளத்திலா??

பெட்டகம்