இங்கே சாத்திரம் பார்க்கப்படும்

கைரேகை சாத்திரம் என்று சொல்லப்படுவது கையிலே காணப்படும் ரேகைகளைப் பார்த்துச் சொல்லப்படுவது(அதனால் தான் அதுக்கு கைரேகை சாத்திரம் என்று பெயர்!!). உள்ளங்கையின் தன்மை, வடிவம், முக்கியமாக அதிலே குறுக்கும் மறுக்கும் தலை போகும் வேலையாய் ஓடித் திரியும் கோடுகள்..இவை எல்லாமாய்ச் சேர்ந்து சாத்திரம் சொல்பவருக்கு வீட்டிலே சோற்றுக்கு வழி செய்கின்றன. உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லக் கூடியனவாம் இக் கோடுகள். முக்கியமான 3 ரேகைகளாவன..ஆயுள்(life), தலை(head),இருதயம்(heart).இவையே ஒருவரின் உடல்நலம், வாழ்நாள்,முக்கிய(ஆளுமை) குணங்கள், வாழ்விலேற்படும் முக்கிய மாற்றங்கள் என்பவற்றைக் குறிக்கின்றன. கையில் காணப்படும் மெல்லிய அல்லது தெளிவற்ற கோடுகளும் ஒருவரின் வாழ்வைப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற கவனமாக (சாத்திரக்காரரால்) பார்க்கப்படும்.

என்னடா திடீரென்று கைரேகை சாத்திர விளக்கம் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?என்ன நடந்தது என்றால் என் தோழி(ப.கு.க.தி தோழி) ஒரு கைரேகைச் சாத்திரம் சொல்லும் தளத்திற்கு சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். சரி online இல் எப்படி கணிக்கப் போகிறார்கள் என்று பார்க்கப் போனேனா..போய் முதலாவது submit ஐ அழுத்தியவுடனேயே பிரச்சனை. என்ன..அதிலே கேட்டிருந்தது என் கையில் இல்லை, அவ்வளவுதான். சரி, உங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று பின்னூட்ட ரேகையில் தெரிவிக்கவும்.

பி.கு: கைவிரல் ரேகை ஒவ்வொருத்தருக்கும் வேறுவேறுதானே..அது போல உதட்டு ரேகையும் ஆளுக்காள் வேறுபடுமாம்.(ரொம்ப அவசியம்! என்று நீங்க சொல்வது கேட்கிறது!!) ;O)

பெட்டகம்