மோப்ப சக்தி

மிருகங்களுக்கு ஆபத்தை அறியும் சக்தி உண்டென்பது தெரிந்த விசயம். ஆனாலும் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவம், ஆராய்ச்சியாளர்களின் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து அணுக வைத்துள்ளது.

ஒரு பெண்மணிக்கு காலில் ஒரு மச்சம்(mole) புதிதாக தோன்றியிருக்கிறது. அவவோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவவின் செல்ல நாய்க்கு அதைக்கண்டு இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்சம் விட்டால் அவவின் செல்ல நாய் அந்த mole ஐ விறாண்டி பிய்த்துப் பிடுங்கி விடும் நிலைக்கு வந்துவிட்டதில் பெரிய தொல்லையாகி விட்டது அவவுக்கு. வைத்தியரிடம் போயிருக்கிறா. காலில் இருக்கிறதைக் கண்டால் அந்த நாய் படும் பாட்டைச் சொல்லியிருக்கிறார். வைத்தியர் அவவைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அப்பெண்ணுக்கு ஆரம்பநிலை தோற்புற்றுநோய் இருந்தமை தெரியவந்தது. (நீங்கள் பையில் வைத்திருக்கும் உணவுப்பண்டத்துக்காக ஏதாவது நாய் உங்களைத் தொடர்ந்து முகர்ந்தபடியே வந்தால் நான் பொறுப்பில்லை! :o) )

இது தெரிந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. ஒருவேளை புற்றுநோய்க் கலங்கள் ஒரு வித மணத்தை வெளியிடப் போய் அதைக் கொண்டு தான் அவவின் நாய்க்கு நிலைகொள்ளவில்லையோ என்று. விடுவார்களா...தொடங்கினார்கள் பரிசோதனையை. புற்றுநோய் உடைய ஒருவரிடமிருந்தும் நோயற்ற கொஞ்சப் பேரிடமிருந்தும் பெறப்பட்ட சிறுநீர் samplesஐ மோப்பம் பிடிக்க விட்டார்கள். நாய் 41% சரியாக புற்று நோயுடையவரின் சிறுநீர் sampleஐ முகர்ந்து பிடித்ததாம். இப்படி, நோயாளிகளின் சிறுநீரைக் கொண்டு புற்று நோய் இருக்கா இல்லையா என்று கண்டுபிடிக்க நாய்களை பயிற்றுவிக்கிறார்கள் இப்போது.

அவர்கள் வியந்த இன்னொரு விடயம்: பரிசோதனையின் போது குறித்த ஒரு (நோயற்ற ஒருவரது) sampleஐ நாய் முகர்ந்து காட்டி, அவர்கள் கவனத்தை ஈர்த்ததாம். ஒரு சந்தேகத்தில் அச்சிறுநீர் sample கொடுத்தவரைப் பரிசோதித்ததில் அவருக்குப் புற்றுநோய் இருந்தது அறியப்பட்டுள்ளது.

non-invasive புற்றுநோய் பரிசோதனை என்கிறார்கள்.

இது வரையில் நாய்கள் செல்ல/காவல் பிராணிகளாகவோ அல்லது மோப்பம் பிடிக்க காவல்/எல்லைப்பாதுகாப்பு/சுங்கப்பிரிவினராலோதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இனிமேல் வைத்தியர்களாலும்!

பெட்டகம்