பழைய குருடி கதவைத் திறடி

என் தோழிக்கு தங்கிலீஷ் தான் தாய்மொழி. நாங்கள் "suம்மா" என்றால் அவள் "Chuம்மா" என்பாள். இதனாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுண்டு. ஒருமுறை எங்கோ போயிருந்த போது அளவான உயரத்துடனிருந்த வாசலைக் கடக்கையில் ஐந்தடி உள்ள அவள் தன் தலையைக் குனிந்து கொண்டதைக் கண்ட நான் சொன்னேன் "நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது" என்று. அவளுக்கு நான் சொன்னது விளங்கவில்லை...

தோழி: What is பிழைப்பு?

நான்: Living / life

தோழி: What does that have to do with my rememberance?

நான்: ???

முழித்த அனுபவத்தில் உவமை சொல்வதையே நிறுத்தி விட்டேன். நேற்று மின்னஞ்சல் பண்ணும்போது "Pazhaya kurudi kathavai thiradi" (பழைய குருடி கதவைத் திறடி) என்று எதற்காகவோ எழுதி அனுப்பினேன்...வந்ததே பதில்...ஆகா!
"why is the old blind person stealing the door? pleae explain"
எனக்கும் முதலில் விளங்கவில்லை....

ப.கு.க.திறடி என்பதை ப.கு.க.திருடி என்று வாசித்ததால் வந்த வினை!

திருவிழா

திருவிழாவின் 6ம் நாள் இன்று. எங்களுடைய, பக்கத்திலிருக்கும் , ஊர்க்கள் தான் இன்றைய உபயகாரர்கள். ஒவ்வொரு நாளும் மேள, நாதஸ்வரக் கச்சேரி சுவாமி வீதிவலத்திற்குப் பின் நடக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தொடராதா என ஏங்க வைப்பதிலேயே குறியாய்
இருக்கிறhர்கள். நான் இவர்களிடம் வைத்திருப்பது பிரமிப்புக் கலந்த மரியாதை.

பெட்டகம்