சூ! மந்திரக்காளி

வேலையில் இருந்தபடியே "இரவுச் சாப்பாடு என்ன" என்று இந்த மனம் முன்னோக்கி (அடடா..!!) சிந்திக்க (சமையல் என்றாலே 'ஒவ்வாமை' <--அதான் allergy!!; அதுக்குள்ளே planning வேறே!) காளான் குழம்பு, முருங்கைகாய் வெள்ளை/பால் கறி, முட்டைப் பொரியல் செய்யலாம் என்று (கஷ்டப்பட்டு) நினைத்து வைத்திருந்தேன். வேலையிலிருந்து pick பண்ணும் போதே அன்புக் கணவர் திருவாய் மலர்ந்தார் "எனக்கு இன்றைக்கு 'ஜனனி'யில மீன் மசாலா தோசை தான் வேணும்"

மனதிற்குள் "அப்பாடா! இன்றைக்கு சமைக்கிறதிலிருந்து தப்பினோம்"
(என்றாலும் காட்டிக் கொள்ளாமல்) வெளியே சத்தமாக : "நான் இன்றைக்கு இதெல்லாம் சமைக்க என்று நினைச்சனான்"...list வாசித்தேன்
கணவர் திடீரென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்து "மழைக்கு இருட்டுதம்மா" ( நான் "நற நற")

வேலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 20 நிமிட drive இல் தான் (என் வயிற்றில் பால் வார்த்த)ஜனனி உணவகம் இருக்கிறது. driving....

அங்கே போனால்...பூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லும் பலகை தொங்குகிறது. ஜனனி உட்பட பல இலங்கை உணவகங்கள் திங்கட் கிழமைகளில் திறப்பதில்லை. மனக்குரல் "ஐய்யய்யோ...சமைக்கணுமோ??"

கணவர் முகம் =O( . "சரி, உன் நண்பி சொன்னாளே, அந்த 'ராம்ஸ்' கடைக்குப் போவம்"
(வயிற்றில் மீண்டும் பால்+தேன் ;O) )

ராம்ஸை தேடியதுதான் மிச்சம்...கண்டே பிடிக்க முடியவில்லை (அட ராமா!!). பிறகென்ன..."மந்திரக்கோல் ஒன்று என்னிடம் இருந்தால் அதை ஒரு "விசுக்கு" விசுக்கி விதம் விதமா சாப்பாடு வரச் செய்யலாம் என்ன!" என்று நிறைவேறாத ஆசையெல்லாம் வெளிப்பட 3 மாடி (மூச்சு வாங்க) ஏறி, கதவு திறந்து, வீட்டிற்கு வந்து அவர் அரிசி போட... நான் கறி சமைக்க...(என்ன சிரிப்பு?)

நல்லா சாப்பிட்டு வந்து கணினிக்கு முன்னாலிருந்து இதை தட்டச்சுகிறேன்.
மனம்:" நாளைக்கு சமைக்கணுமே...என்ன கறி வைக்கலாம்?"
நாளைய பிரச்சனை நாளைக்கு! என்று யாராவது இந்த "மனத்துக்கு" சொல்லுங்களேன்!

பெட்டகம்