வாங்க..நாட்டுக்கே முன்னுதாரணம் ஆகலாம்

சொந்தக்கார அண்ணனொருவர் சத்தமில்லாமல் 3ம் முறையாக மக்கள் தொகையை உயர்த்திவிட்டிருக்கிறார். அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள்தான், 3 தனித்தனிப் பிரசவங்களில் 3 பிள்ளைகள். மனைவியின் உடல்நலம் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது "3ம் குட்டி போட்டாச்சு, அடுத்ததுக்கு plan பண்ணனும்" என்று சாதனையாய்(!?) பேசுகிறார். இந்த அண்ணா வீட்டில் 8 பேர். தன் தாய்தந்தையின் record ஐ உடைப்பது தான் இவரது குறிக்கோள்! கல்யாணமாகிய புதிதில் நாங்களுமிருக்கும் போது மனைவியிடம் இதை சொன்னார்..அந்த அப்பாவிப் பெண் சும்மா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தா.  சாதனை முறியடிக்கிறாராம்...சாதிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லையா? இவரை நினைத்தால் ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் (அட மடையா! என்று) மனவருத்தமாகவும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போல் பிரசவத்தின் போது கணவனும் கூடவே இருக்க வேண்டும் என்பதை எம்மூர்களிலும் செயலுக்குக் கொண்டு வந்தால் தான் இப்படிப் பட்டவர்களுக்கு பிரசவத்தின் extreme விளங்கும்.

குறைந்த பட்சம் தனியார் வைத்தியசாலைகளிலாவது இதை செயல்படுத்த முனையலாம். உங்கள் குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்கும் முதலாவது ஆளாய் இருங்கள் என்ற range ல் ஏதாவது catchy யாகச் சொல்லி ஒரு கணவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டால், அவனுக்கு மனைவியின் அருகேயிருந்து தன் குழந்தையின் பிறப்பைப் பார்க்க ஆசை வரும், பிரசவத்தின் போது மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையை பெற்றுக் கொள்வான். கொஞ்சமாக தன் நண்பர்களிடையே "என் குழந்தை பிறந்த போது நான் தான் முதலில் தூக்கினேன்..பார்த்தேன்" என்றெல்லாம் சொல்லிக்கொள்கையில் நண்பர்களும் அவன் முன்னுதாரணத்தைப் பின்பற்ற சந்தர்ப்பம் உள்ளது. இது அப்படியே பரவி fashion ஆக மாறிவிட்டால் (கனவு காண்பது பிழையா சொல்லுங்க?) "எங்கம்மா 8 பேரை பெத்தா..நீ எனக்கு 10 பெற்றுக் கொடு" என்கிற மடமைகள் இல்லாமல் போகும்.

பி.கு: இதை வாசிக்கும் ஆண்களில் யார் (இலங்கையில், இந்தியாவில் மற்றும் எங்கு பிரசவத்தின் போது கணவன் கூடவே இருக்கும் வழக்கம் இல்லையோ அந்த நாடுகளில்) பிள்ளையைப் பெறும் போது,  மனைவியுடன் கூடவேயிருந்து உங்கள் குழந்தையை வரவேற்கப் போகிறீர்கள் என்பதை(வைத்தியர் கேட்க முதல் நீங்களாகவே) வைத்தியரிடம் சொல்லி, செயலிலும் காட்டி (நாட்டுக்கே) முன்னுதாரணமாகப் போகிறீர்கள்? 
 

பெட்டகம்