சுயசரிதை

தனது ஆய்வுக்காக "உம்மைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக" என்று (எல்லாரையும்) கேட்ட மதுமிதாவுக்கு-

முன்குறிப்பு: ஆய்வில் என் பதிவைச் சேர்த்துக் கொள்ள இத்தால் (சுயநினைவுடன் என்று நினைத்துக் கொண்டு..) சம்மதம் அளிக்கிறேன்.

வலைப்பதிவர் பெயர்: ஷ்ரேயா

வலைப்பூ பெயர் : "மழை"

சுட்டி(உர்ல்) : http://mazhai.blogspot.com

ஊர்: எதைக் கேட்கிறீங்க? பிறந்ததா? வளர்ந்தவையையா அல்லது வசிப்பதையா? இல்லாட்டி பிடிச்சதையா???

நாடு: முன்னம் இருந்தது இலங்கையில. இப்ப வசிப்பது அவுஸ்திரேலியாவி
ல.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான். (தன் கையே தனக்குதவியாமே!!)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: தமிழ்ப்பதிவிலே.. 01/மார்ச்/2004

இது எத்தனையாவது பதிவு: நூறுகள் - 01, பத்துக்கள் - 04, ஒன்றுக்கள் - 08

இப்பதிவின் சுட்டி: http://mazhai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தது எப்பவுமே நாட்குறிப்பு மாதிரி இருந்தது. வாசித்த தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கம் வித்தியாசமாய் இருந்ததால், முயற்சித்துப் பார்க்க என்று சோதியில் கலந்தேன்.

சந்தித்த அனுபவங்கள்: 90% நல்லவையே

பெற்ற நண்பர்கள்: அருமையானவர்கள்.

கற்றவை: நிறைய. என் பார்வைகள்/கருத்துக்கள் சீர்ப்பட்டிருக்கின்றன

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்பொழுதும் இருந்ததுதான். புது ஊடகம், அவ்வளவுதான் வித்தியாசம்.

இனி செய்ய நினைப்பவை: ஆரம்பிப்பதை முடிப்பது. நிறைய இடம் பார்க்க வேண்டும். புத்தகங்களும் வாழ்க்கையும் நிறையப் படிக்க வேண்டியதிருக்கிறது. இன்னும் நிறையச் சிரிக்கவும் வேண்டும்.. நான் சிரிப்பது காணாதாம்!! ஆ!மறந்துவிட்டேன்..தண்ணீரும் குடிக்க வேண்டும் இப்போதையதை விட அதிகமாக.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லாரையும் மாதிரி ஆசையும் கோபமும் கனவும் ஆதங்கமுமென்று எல்லாம் நிரம்பிய, இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறவர்.(<<<"வள்" போடாமல் "வர்" போட்டதன் காரணம்: தன்னைத்தானே முதல்லே மதிக்க வேணுமாமே!)

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: 1)மனிதர்களைப் போலச் சிறந்த ஆசான்கள் யாருமில்லை.(தத்துவம் தத்துவம்!!). 2) நன்றி.. வணக்கம்.

பெட்டகம்