சரவணபவனில் மகாராஜா

ஒரு நாள் சதீசும் மற்றைய 4/5 நண்பர்களும் நல்லாக பியர்+வேறு உற்சாக பானங்கள் அருந்தி விட்டு, கொழும்பு-வெள்ளவத்தையில் இருக்கும் சரவணபவன் சைவ உணவகத்திற்கு போனார்களாம். அங்கே உணவு பரிமாறுபவர்கள்(waiters) தமிழ்ப் படங்களில் வரும் அரச சேவகர் போல் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நண்பர் கூட்டத்திற்கு நல்ல பசி+வெறி. waiter வருவார் என்று பொறுமையாய் காத்திருக்க, கூட்டத்தில் ஒருவன் கையைத் தட்டி "யாரங்கே" என்று சொல்லவும், waiter வரவும் சரியாய் இருந்திருக்கிறது.

"அரசன் நான் வந்து எவ்வளவு நேரம் காத்திருப்பது, உடனே 10 தோப்புக்கரணம் போடு!" என்று சொல்லியிருக்கிறான். waiter ம் இவர்களை humour பண்ண நினைத்து "சரி மகாராஜா" என்று ஒரு தோப்புக்கரணம் மட்டும்போட்டிருக்கிறார். பிறகு "என்ன உணவு வேண்டும்" எனக் கேட்டு எல்லோரது ஓடரையும் எடுத்துக்கொண்டிருக்க, மீதி தோப்புக்கரணம் போடவில்லையென்று மகாராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. ரகளை பெரிதாக முன்பு இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முகாமையாளர் ஒடி வந்து waiterஐ காப்பாற்றி விட்டராம். "எனக்கே சாப்பாடு தராமல் துரத்தி விட்டார்களே"என்று திரும்பி வருகையில் மகாராஜா ஒரே புலம்பலாம்!

இப்போது இந்தக் கூட்டத்திலுள்ள ஒருவருக்கும் அங்கே அனுமதி இல்லை என்று கேள்வி =O).

0 படகுகள் :

பெட்டகம்