ஆறும் மீனும்


எங்கோ ஒரு தொட்டியிலிருந்தபடி ஆற்றைக் கனவு காண்கிறது மீன்.
மழையைக் கரைத்தும் படுகையை வளைத்தும் 
ஆற்றை நீட்டிக்கும் மீன் அறியாததல்ல
ஆறு கடல் சேரும் நியதி.
நீச்சலில் அதன் அழகும்
செதிலிடுக்கில் அதன் வெம்மையும் என 
ஆற்றைக் கொண்டலைகிறது மீன்.
வெயில் தொட்டு ஆவியாகிற  ஆற்றையும் 
அது சேரப்  போகிற கடலையும்  கனவில் கேட்டு விதிர்க்கிறது.
கலைந்த கனவில் சுழித்தோடுகிறது அதன் ஆறு.

பெட்டகம்