நானும் மைக்கல் ஜாக்சனும்

9ம் ஆண்டில் நான் வேறு ஒரு பாடசாலையில் சேர்ந்தேன்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது - என் வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளில் சிலர் ஒரு கூட்டமாக இருந்து ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அது வரை படித்திருந்தது தமிழில்."என்னடா இது, அம்மா திடீரென்று English medium இல் கொண்டு வந்து சேர்த்து விட்டாவே" என்று எனக்குள்ளேயே நினைத்துப் பயந்து போனேன்.அம்மாவை ஏசாத குறை! ஆசிரியர் வந்து தமிழில் பாடம் நடத்தத் தொடங்கிய பின்தான் நிம்மதியாயிற்று.


அன்றே இன்னொரு சம்பவமும் நடந்தது.
எனக்குப் பக்கத்திலிருந்த பெண் "do you listen to English songs?" என்று கேட்டாள். ஏனோ "yes "என்று சொல்லி விட்டேன்.அடுத்த கேள்வி வந்தது..." Do you have black or white?"
நான் யோசிக்கிறேன் - என்னத்தில் கறுப்பா வெள்ளையா இருக்கிறது எனக் கேட்கிறாள் இவள் என்று!(அப்போது எனக்குத் தெரியாது என்னிடம் Michael Jackson பாடிய Black or white பாட்டைப் பற்றித் தான் கேட்கிறாள் என்று!!) இல்லை என்று சொன்னால் என்ன நினைப்பாளோ என்பதற்காக "white" என்னிடம்இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்.என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள். வேறு ஒன்றும் சொல்லவில்லை. நாள் போகப் போக நாங்கள்நல்ல நண்பிகளாகி விட்டோம்.இந்தச் சம்பவம் அவளுக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை. (என்னத்தைக்
கேட்டாள் எனக்குத் தெரியவில்லையே என்ற வீராவேசத்திலும், இவள் கேள்வி கேட்டால்சொல்வதற்கும் என்றே வீட்டில் ஆங்கிலப் பாட்டு கேட்டதும் வானொலியில் english station பிடித்து வைத்திருந்ததும் தனிக்கதை.)

பழைய குருடி கதவைத் திறடி

என் தோழிக்கு தங்கிலீஷ் தான் தாய்மொழி. நாங்கள் "suம்மா" என்றால் அவள் "Chuம்மா" என்பாள். இதனாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுண்டு. ஒருமுறை எங்கோ போயிருந்த போது அளவான உயரத்துடனிருந்த வாசலைக் கடக்கையில் ஐந்தடி உள்ள அவள் தன் தலையைக் குனிந்து கொண்டதைக் கண்ட நான் சொன்னேன் "நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது" என்று. அவளுக்கு நான் சொன்னது விளங்கவில்லை...

தோழி: What is பிழைப்பு?

நான்: Living / life

தோழி: What does that have to do with my rememberance?

நான்: ???

முழித்த அனுபவத்தில் உவமை சொல்வதையே நிறுத்தி விட்டேன். நேற்று மின்னஞ்சல் பண்ணும்போது "Pazhaya kurudi kathavai thiradi" (பழைய குருடி கதவைத் திறடி) என்று எதற்காகவோ எழுதி அனுப்பினேன்...வந்ததே பதில்...ஆகா!
"why is the old blind person stealing the door? pleae explain"
எனக்கும் முதலில் விளங்கவில்லை....

ப.கு.க.திறடி என்பதை ப.கு.க.திருடி என்று வாசித்ததால் வந்த வினை!

திருவிழா

திருவிழாவின் 6ம் நாள் இன்று. எங்களுடைய, பக்கத்திலிருக்கும் , ஊர்க்கள் தான் இன்றைய உபயகாரர்கள். ஒவ்வொரு நாளும் மேள, நாதஸ்வரக் கச்சேரி சுவாமி வீதிவலத்திற்குப் பின் நடக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தொடராதா என ஏங்க வைப்பதிலேயே குறியாய்
இருக்கிறhர்கள். நான் இவர்களிடம் வைத்திருப்பது பிரமிப்புக் கலந்த மரியாதை.

எனக்குப் பிடித்த பலவற்றில் முதலிடம் வானத்திலிருந்து நீளும் வெள்ளித் துளிச்சரங்களுக்கே!

அடடா கவிதை மாதிரி எல்லாம் வருதே!!LOL =O)

பெட்டகம்