நேர மாற்றம்

மு.கு: தொலைக்காட்சிச் செய்தி பார்த்தலும் இணையத்திலேயும் அசல் வடிவிலேயும் பத்திரிகை வாசிப்பதும் என் தினப்படி நடவடிக்கைகள்.

--------------------------

சனிக்கிழமை பின்னேரம்:
"சாந்திக்கா.. நாளைக்காலையிலே எனக்கு ஏழு மணிக்கு வேக்கப் கோல் .. மறந்திராதிங்க"
"இல்லமா..மறக்காம கட்டாயம் தரேன். இல்லன்னா பலகாரம் செய்ய வீட்டுக்குத்தான் வரணும்"
"ஒகே..நாளைக்காலையிலெ பேசலாம்..போய்ட்டு வர்றோம்"

ஞாயிறு காலை, 07:15 மணி
முழிப்பு வந்திட்டுது. என்னடா இந்த சாந்திக்கா இன்னும் போன் பண்ணல்லயே...என்று யோசித்துக்கொண்டே எழும்புகிறேன். நாட்காட்டியைப் பார்த்தால், 26 மார்ச். ம்ம்..இன்றைக்கு ஏதோ நடக்கோணுமே என்பது தெரிகிறதே ஒழிய என்னவென்று ஞாபகம் வர்ற மாதிரிக் காணோம்.சரி, வரக்குள்ள வரட்டும் என்று விட்டாச்சு.

8 மணி.. சாந்திக்காவின் வேக்கப் கோல். அவவின் "குட் மானிங்..எழுந்துக்கலயா இன்னும்?"க்குப் பதில் சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு, தன்னிச்சையாக தொ.காவைப் போட்டால் பொறி தட்டியது இன்றைக்கு நேரம் மாத்துற நாள் என்று. "ஒரு மணித்தியாலம் அதிகமாக இருக்கே.. அநியாயமா வெள்ளனவே எழும்பிட்டனே" என்று நொந்து கொண்டேன்.
என்றாலும் சந்தேகம்.. தொ.காவில் நேற்றுப் பார்த்த போதெல்லாம் நேர மாற்றத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? ம்ம்ம்... சரி எதுக்கும் டிவில பாப்பம்.. சனல்10 மாத்தியிருக்கு. சனல்7 ஏன் பழைய நேரத்தையே போட்டுக்கொண்டிருக்கிறாங்கள்? போடு டெக்ஸ்ற்ற..அதில மாத்திருக்கிறான். சாந்திக்காவும் அதுதான் 8 மணிக்கு எழுப்பியிருக்கிறா..நேரம் மாறினா 8மணி 7 மணியாயிரும்.. சரிதானே!!
என்டாலும் ஒரு சந்தேகம், கணினியைப் போட்டேன்..அதிலயும் நேரம் மாறிட்டுது. அப்ப சரிதான். அடட.. இன்டைக்கு நல்லா நேரமிருக்கு. ஆறுதலாப் போகலாம் பலகாரம் சுட. இவன் சனல்7காரனுக்கு லூஸ். நேரம் மாத்தாம சனத்தைக் குழப்புறான்.

எடு வீட்டிலில இருக்கிற மணிக்கூடெல்லாம். அலாரம் மட்டுமே 4. (இதிலே முக்கியமாச் சொல்லோணும்: அலாரமும் மின்சூளும் (டோர்ச் லைட்) கொஞ்சம் வித்தியாசமான உருவங்கள் நிறங்களில கண்டா, எங்கட வீட்டில குடியேறிடும். தலையாட்டிக்கொண்டிருக்கிற அலாரம் தொடங்கி, வட்ட/சதுர/திருகிற/பொத்தான் அமத்திற மின்சூள் வரைக்கும் இருக்கு. ஒரு மியூசியமே இதுகளுக்காண்டித் தொடங்கலாம். தூக்கி எறிவமெண்டா அதுக்கு தடையுத்தரவு. அதிலயும் ஒரு அலாரம் இருக்கு. சரிய சனிக்கிழமையிலே காலமை 11 மணிக்கு அடிக்கும். எங்கெருந்து சத்தம் வருதென்டு இன்னும் கண்டுபிடிச்சுக் கொண்டிருக்கிறம்)

சரி, இனி அறைக்குள்ளே இருக்கிறதும், வரவேற்பறையிலிருக்கிறதும் குசினியில இருக்கிரதும் என்டு இன்னும் மூண்டு. மொபைல்லயும் மாத்தோணும்.. எடு அதுகளையும். இருந்து எல்லாத்திலயும் மாத்தியாச்சு.

குளிச்சு வெளிக்கிட்டு, (அப்பவும் சனல்7 நேரம் மாத்தல்ல, அசல் விசரங்கள்) காலமைச் சாப்பாடு சாப்பிடுறன்.. தொ.பே.அழைப்பு வருது.

"ஓய்! எங்கெ இருக்கே? புறப்பட்டுட்டியா இல்ல இன்னு வீட்லேயேதானா? பத்தேகால் மணி இப்போ! ..பலகாரம் 10மணிக்கு ஆரம்பிக்க என்று இருந்தோமே..என்ன ISSAT (Indian Srilankan Standarad Arrival Time) ஆ?"
"ஹையோ! ISSATலாம் இல்ல. இன்னைக்கு டேலைட் சேவிங்க்ஸ்க்கு நேரம் மாத்தினாங்களே.. தெரியாதா? நான் லேட் இல்ல. இப்பத்தான் ஒம்பதேகால்"

"அம்மா..தாயே.. இ-மெயில்,பேப்பர் வாசிக்கிறப்ப, டீவி பாக்கறப்ப கொஞ்சூண்டு கான்சன்ட்ரேட் பண்ணனும்மா..டைம் இந்த வாரம் மாத்தலே"
"...(என்ன உளர்றா)..."
"அதான் மெல்பேண்லே கொமன்வெல்த் கேம்ஸ் நடக்குதில்ல..அதனாலே அடுத்த வாரம்தான் டைம் மாத்துறாங்க. ராசாத்தி, உங்க நேரத்தை மாத்திட்டு தயவு செஞ்சு உடனடியா புறப்படுறீங்களா?!"
"போச்சுடா!!அப்ப நான் இன்டைக்கும் லேட்டா?" :O(

2 படகுகள் :

வசந்தன்(Vasanthan) March 28, 2006 4:35 pm  

அடடா,
எழும்பியாச்சா?
நானும் ஏதோ நீங்கள் கும்பகர்ண நித்திரையில இருக்கிறதாகவும், இனி ஆறு மாசத்துக்குப்பிறகுதான் வலைப்பக்கம் வருவியளெண்டும் நினைச்சுக் கொண்டிருந்தன்.

இஞ்சையும் உந்தக் கூத்துத்தான். ஞாயிறு விடிய, கணிணியில நேரம் மாறீட்டுது. அண்டைக்குத்தான் ஏ.பி.சியில பாலா அண்ணையின்ர செவ்வி வருதெண்டு புது நேரத்துக்கேற்ற மாதிரி தொலைக்காட்சிப் பெட்டிக்கும் முன்னால குந்தியாச்சு. அவங்களும் போடுறமாதிரிக் காணேல. பிறகு வழமையான நேரத்துக்கே போட்டாங்கள். அப்ப விளங்கீச்சுது பிரச்சினை, வாற கிழமையில இருந்துதானாம் நேரமாற்றமெண்டு.

அதுசரி, இலங்கையில நேரமாற்ற முசுப்பாத்தி நடக்குது தெரியுமோ?
இவ்வளவுநாளும் சந்திரிக்கா நேரம் - பிரபாகரன் நேரம், அம்மா நேரம் - ஐயா நேரம், கொழும்பு நேரம் - வன்னி நேரம், சிறிலங்கா நேரம் - தமிழீழ நேரம் எண்டு சனத்திட்ட புழக்கத்தில இருந்த நேரவித்தியாசம் இப்ப ஒண்டா வருது. அரசாங்கம் பழையபடி சரியான நேரத்துக்குக் கொண்டுவருது.

"சிறிலங்கா புலிகளின் நேர ஒழுங்குக்கு வருது" எண்டு எழுதிறாங்கள். பத்தாததுக்கு ஒரு பத்திரிகை புலிகளின்ர பொறுப்பாளரிட்ட கேக்குது, " அரசாங்கம் உங்கள் நடைமுறையிலுள்ள நேர ஒழுங்குக்கு வருகிறது. நீங்கள் நேரமாற்றத்தைச் செய்வீர்களா?"

கடந்த சில வருடங்களாக புலிகள் கடைப்பிடித்த நேர ஒழுங்கு தனிப்பட்ட அரச நிர்வாகத்துக்குரிய ஒரு கூறாகவே வெளிநாட்டு ஊடகங்களாற் பார்த்து வரப்பட்டுள்ளது. உண்மையும் அதுதான். இப்போது அதைச் சரிக்கட்டி விட்டது அரசு. நேரமிருந்தால் நேரமாற்றம் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 28, 2006 5:07 pm  

ஐயோ கடியாதையும்... (அ)ரத்தம் வரப்பாக்குது!! ;O)

//சிறிலங்கா புலிகளின் நேர ஒழுங்குக்கு வருது" எண்டு எழுதிறாங்கள். பத்தாததுக்கு ஒரு பத்திரிகை புலிகளின்ர பொறுப்பாளரிட்ட கேக்குது, " அரசாங்கம் உங்கள் நடைமுறையிலுள்ள நேர ஒழுங்குக்கு வருகிறது. நீங்கள் நேரமாற்றத்தைச் செய்வீர்களா?"//

நல்ல பகிடி!!சிரிச்சுச்சிரிச்சு கண்ணீர் வருது...

பெட்டகம்